Wednesday, December 21, 2016
11 பேரை பலி கொண்ட சாவகச்சேரி விபத்து! பஸ் சாரதிக்கு பிணை
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் 11 பேர் உயிரிழக்கக் காரணமான வாகன விபத்துச்சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பஸ் சாரதியை ஐம்பதாயிரம் ரூபா ஆட்பிணையில்செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.
சாவகச் சேரி நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் செ-கணபதிப்பிள்ளை முன்னிலையில்சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மூவரின் சாட்சியமும் நீதவான் முன்னிலையில்பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி நீதவானால் குறித்த வழக்குத்தவணையிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment